அப்போலோ மற்றும் மலர் ஃபோர்டிஸ் மருத்துவமனை செவிலியர்கள் போராட்டம் வெற்றிகரமாக நான்காவது நாளை நோக்கிச் சென்று கொண்டுள்ளது. இந்த கார்பொரேட் மருத்துவ நிறுவனங்கள் நவீன மருத்துவம் என்கிற பெயரில் நோயாளிகளின் கடைசிச் சொட்டு ரத்தம் வரை உறிஞ்சுவது தவிர நர்சுகள் உள்ளிட்ட மருத்துவ மனை ஊழியர்கள் மீது மேற்கொல்ளும் சுரண்டல் கொடுமை சொல்லி மாளாது. கார்பொரேட் கொடூரங்களை எதிர்த்து ஊழியர்கள் வெளிக் கிளம்புவது மிக அபூர்வம். குறைந்த பட்ச ஊதியம் 15000 ரூபாய் என்பது உள்ளிட்ட மிக நியாயமான கோரிக்கைகளை வைத்துப் போராடும் அவர்களின் போராட்டத்தை நாம் எல்லோரும் ஆதரிக்க வேண்டும். க்ரீம்ஸ் சாலையிலிருந்த வாலஸ் கார்டனில் குடியிருந்த குடிசை மக்களை விரட்டி அடித்து அப்போலோவுக்கு நிலத்தை வழங்கியது எம்.ஜி.ஆர் அரசு. கார் பார்கிங் எனச் சொல்லி இடத்தைச் சலுகையில் வாங்கிப் பின் அதை செந்தூரி ஓட்டலாக இன்று கட்டிக் கொள்ளை அடிக்கிற நிறுவனம் அப்போலோ (பார்க்க: எனது, 'சிங்காரச் சென்னையும் சீரழியும் வாழ்வுகளும்'). மெடிகல் டூரிசம் என்கிற பெயரில் ஏகப்பட்ட சலுகைகளை இந்திய அரசு இந்நிறுவனத்திற்கு வாரி வழங்கியுள்ளது. டில்லி இந்திர பிரஸ்தாவிலுள்ள அப்போலொ மருத்துவமனைக்கு ஏக்கர் ஒரு ரூபாய் என நிர்ணயித்து நிலம் வழங்கியது இந்திய அரசு (பார்க்க: அதே நூல்). பதிலாக ஏழை எளியவர்களுக்குக் குறிப்பிட்ட சதம் இலவசமாக மருத்துவம் செய்ய வேண்டும் என்பது ஒப்பந்தம். அதை இந்த நிறுவனம் நிறைவேர்றுவதில்லை. இதை அரசு கண்டுகொள்வதுமில்லை. மாறாக public private partnership என்கிற பெயரில் ஏகப்பட்ட சிறப்புரிமைகள் அந்நிறுவனத்திற்கு வழங்கப்படுகிறது.( பார்க்க: எனது, 'மருத்துவ நலப் பிரச்சினைகள்'). கார்பொரேட் சுரண்டல் நமது யுகத்தின் ஆகப் பெரிய கொடுமை. கிளர்ந்தெழுந்துள்ள தொழிலாளி வர்கத்திற்கு ஆதரவாக அணி திரள்வோம்!
Thursday, 8 March 2012
இரண்டு நாட்களுக்கு முன்னர் மார்க்ஸிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான டி.கே.ரங்கராஜன் திருச்சியில் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் இலங்கை அரசின் போர்க் குற்றங்களை இலங்கை அரசுதான் விசரிக்க வேண்டும், வெளி நாட்டுத் தலையீட்டை ஏற்க இயலது எனச் சொல்லியிருந்தார். ஐ.நா அவையில் இந்திய அரசு கொண்டு வரும் தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வேண்டும் என்கிற குரல் தமிழகத்தின் பல தரப்புகளிலிருந்தும் எழும் நிலையில் அவர் அப்படிக் கூறியிருந்தது குறிப்பிடத் தக்கது. குற்றம் செய்தவரே குர்றத்தை விசாரிக்க வேண்டுமாம் எனக் கிண்டலாக அச் செய்தியை எக்ஸ்பிரஸ் இதழ் பதிவு செய்திருந்தது. அடுத்த நாள் கட்சியின் பொதுச் செயலளர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் சென்னையிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் முன் நடைபெர்ற ஆர்பாட்டத்தை ஒட்டிப் பலர் கைதாயினர். போரில் பாதிப்படைந்தவர்களின் மீள் குடியேற்றத்தை வற்புறுத்தி அந்த ஆர்பாட்டம் நடைபெற்றது. பலரும் நினைப்பதுபோல மார்க்சிச்ட் கட்சி ஒரு damage control exercise ஆக இந்த இரண்டாம் நிகழ்வை அவர்கள் நடத்தியிருந்த போதிலும் கூட அது வரவேற்கத் தக்கதே. ஈழத்திலுல்ள மக்களின் கோரிக்கைகளையும் எதிர்பார்ப்புகளையும் பற்றிக் கிஞ்சித்தும் கவலை இல்லாமல் இங்கொரு அரசியல் நடந்து கொண்டுள்ள போது இந்தக் கோரிக்கையை அவர்கள் நினைவூட்டியது வரவேற்கத்தக்கதே. இன்னுங் கொஞ்சம் உடனடிக் கோரிக்கைகளையும் அவர்கள் சேர்த்திருக்க வேண்டும். போர்க் குற்ற விசாரணை தொடர்பான அவர்களின் நிலைபாடுதான் கவலை அளிக்கிறது. அமெரிக்காவின் நோக்கமும் இலங்கை மீதான அதன் ஆதங்கமும் நமக்குப் புரியாமலில்லை. ஐ.நா அவை அதன் எடுபிடியாக உள்ளதென்றபோதிலும் ஐ.நா அவையின் தலையீட்டை வெளிநாட்டுத் தலையீடு எனச் சொல்ல முடியுமா? ஐ.நா அவை தீர்மானத்தை அப்படிக் கருதிவிட இயலுமா? இன்றைய இலங்கையின் அரசியல் சூழலில் ஒரு நீதியான விசாரணையை அங்குள்ள அரசே நடத்திவிட இயலுமா? இப்படியான ஒரு சூழலில் ஒரு குறிப்பிட்ட அளவு வெளி அழுத்தம் இல்லாமல் எப்படி போர்க் குற்றங்களில் நீதி கிடைக்கும்? ஈராக், ஆப்கனிஸ்தான் நாடுகளின் மீதான ஆக்க்ரமிப்புத் தாக்குதல்களைப் போன்ற ஒன்றை நாம் எந்த நாட்டின் மீதுமே ஏற்றுக் கொல்ள இயலாதெனினும் போர்க்குற்ற விசாரணை தொடர்பான அழுத்தங்களைக் கூடக் கொடுக்கக் கூடாதென்பது எப்படிச் சரியாக இருக்கும்?
"சிறைவாசியே சொல்.... உடைக்க முடியாத இந்த உறுதியான சங்கிலியை வடித்தவர் யார்?"
சிறைவாசி சொன்னான் "கவனத்தோடு இதை வடித்தவன் நான்தான். வெல்ல முடியா என் வலிமை இவ்வுலகையே சிறைப்பிடித்து தடையில்லா சுதந்திரத்தில் நான் திளைக்க உதவும் என நினைத்தேன். இரவும் பகலும் பெரும் தீ வளர்த்து இரும்பை உருக்கினேன். பேரடிகள் அடித்தவண்ணம் இருந்தது சம்மட்டி. வடிப்பது முடிந்தது. இணைப்பும் கொடுத்தாயிற்று. உடைக்கமுடியாத உறுதி தெரிந்தது சங்கிலியில். முடிவில் பார்த்தால் அதன் பிணைப்பில் நான்"
(ரவீந்திரநாத் தாகூர், கீதாஞ்சலி, 31-ம் பா)
அடிமைத் தளை, அடிமையை மட்டுமல்ல அடிமை கொண்டவனையும் துன்புறுத்தும். பெண்கள் தினத்தில் என் ஆண் நண்பர்களுக்கு இந்த வரிகளை சமர்ப்பிக்கிறேன். —
Subscribe to:
Comments (Atom)